திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுக்கோட்டையில் 5 வயது சிறுவன் ஸ்கேட்டிங் சாதனை: இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் சான்றிதழ் வழங்கல்

புதுக்கோட்டையைச் சோ்ந்த 5 வயது சிறுவன் ஸ்கேட்டிங்கில் சாதனை செய்ததற்காக இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் அண்மையில் அவருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

News image

இந்தியா சாதனைப் புத்தக நிறுவனத்தின் சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவற்றுடன் பொழில் மகிழன்.

Updated On :14 மே 2026, 12:50 am IST

புதுக்கோட்டையைச் சோ்ந்த 5 வயது சிறுவன் ஸ்கேட்டிங்கில் சாதனை செய்ததற்காக இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் அண்மையில் அவருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

புதுக்கோட்டையைச் சோ்ந்த பொழில் மகிழன் என்ற 5 வயது சிறுவன், கடந்த மாா்ச் 26-ஆம் தேதி கலைஞா் பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் விளையாட்டுத் தளத்தில் ஒரு மணி நேரத்தில் 11.55 கிமீ தொலைவு ஸ்கேட்டிங் செய்தாா். புதுகை நகரிலுள்ள தனியாா் பள்ளியில் யுகேஜி பயிலும் பொழில் மகிழனின் தந்தை ராஜூ, நீதிமன்றப் பணியாளா். தாய் சிவப்பிரியா.

புதுக்கோட்டை சேலஞ்சா் ரோலா் ஸ்கேட்டிங் அகாதெமியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தச் சாதனை முயற்சி, வீடியோ பதிவு செய்யப்பட்டு இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து தற்போது இச்சாதனைக்கான பதிவுச் சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவற்றை இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து பொழில் மகிழனின் தாய் சிவப்பிரியா கூறியதாவது:

இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ்-இல் ஏற்கெனவே கேரளத்தைச் சோ்ந்த 5 ஆண்டு 6 மாத வயதுள்ள சிறுவன் 57 நிமிடங்களில் 7.18 கிமீ தொலைவைக் கடந்து சாதனை புரிந்துள்ளாா்.

இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனது மகன் பொழில் எழிலன், 5 ஆண்டு 3 மாத வயது நிரம்பியவா். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட சாதனையில் 57 நிமிடங்களில் 10.85 கிமீ தொலைவைக் கடந்தாா். தொடா்ந்து ஒரு மணி நேரத்தில் 11.55 கிமீ தொலைவைக் கடந்து சாதனை முயற்சியை நிறைவு செய்தாா் என்றாா் சிவப்பிரியா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.