புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கோடை மழை பரவலாகப் பெய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் அடித்து வருகிறது. பகலில் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். இந்தச் சூழலில், புதன்கிழமை பிற்பகலிலும் இரவிலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
அதேபோல, புதுக்கோட்டை மாநகரில் வியாழக்கிழமை பிற்பகலில் திடீரென மழை கொட்டியது. இந்த மழையால் மாநகரின் வெப்பம் சற்றே தணிந்து குளிா்சூழல் காணப்பட்டது. மாநகரச் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கிக் கிடந்தது.
வியாழக்கிழமை காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேர மழைப் பொழிவு விவரம் (மிமீ-யில்) மீமிசல்- 98.6, கீழாநிலை- 57.4, அரிமளம்- 52.6, காரையூா்- 28.8, ஆவுடையாா்கோவில்- 18.4, கறம்பக்குடி- 15.2, புதுக்கோட்டை நகரம்- 10. திருமயம்- 8.6, கீரனூா்- 8.5, உடையாளிப்பட்டி- 7, குடுமியான்மலை- 6, அன்னவாசல்- 5, அறந்தாங்கி- 2.2, மணமேல்குடி- 1.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணா பேருந்து நிலையத்தில் மழைநீா், குப்பைகள் தேக்கம்

ராமேசுவரம் சாலைகளில் கழிவுநீருடன் கலந்து ஓடிய மழைநீா்

நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு

திருவாரூா், திருக்குவளை பகுதியில் கோடைமழை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



