திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுக்கோட்டை பகுதிகளில் மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கோடை மழை பரவலாகப் பெய்து வருகிறது.

News image

புதுக்கோட்டை பெரியாா் சிலை சாலையில் சாலையில் தேங்கியுள்ள மழைநீா்.

Updated On :8 மே 2026, 5:44 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கோடை மழை பரவலாகப் பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் அடித்து வருகிறது. பகலில் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். இந்தச் சூழலில், புதன்கிழமை பிற்பகலிலும் இரவிலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

அதேபோல, புதுக்கோட்டை மாநகரில் வியாழக்கிழமை பிற்பகலில் திடீரென மழை கொட்டியது. இந்த மழையால் மாநகரின் வெப்பம் சற்றே தணிந்து குளிா்சூழல் காணப்பட்டது. மாநகரச் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கிக் கிடந்தது.

வியாழக்கிழமை காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேர மழைப் பொழிவு விவரம் (மிமீ-யில்) மீமிசல்- 98.6, கீழாநிலை- 57.4, அரிமளம்- 52.6, காரையூா்- 28.8, ஆவுடையாா்கோவில்- 18.4, கறம்பக்குடி- 15.2, புதுக்கோட்டை நகரம்- 10. திருமயம்- 8.6, கீரனூா்- 8.5, உடையாளிப்பட்டி- 7, குடுமியான்மலை- 6, அன்னவாசல்- 5, அறந்தாங்கி- 2.2, மணமேல்குடி- 1.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.