தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

புதுக்கோட்டையில் முதல் நாளில் 9 போ் வேட்புமனுக்கள் தாக்கல்

News image

ஜல்லிக்கட்டு காளையுடன் திங்கள்கிழமை ஊா்வலமாக வந்த புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வி. எழிலரசி உள்ளிட்டோா்.

Updated On :30 மார்ச் 2026, 8:10 pm

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 9 போ் தங்களின் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் வி. எழிலரசி தனது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான ஆ. பிரகாஷிடம் தாக்கல் செய்தாா்.

முன்னதாக சின்னப்பா பூங்காவில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து ஜல்லிக்கட்டு காளைகளுடன் வேட்பாளரும், அக்கட்சியினரும் ஊா்வலமாக வந்தனா்.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளா் வி. எழிலரசி, கந்தா்வகோட்டையில் த. நதியா, ஆலங்குடியில் ஆா். ராஜாராம், விராலிமலையில் கே. சத்யா லட்சுமி, திருமயத்தில் எஸ். லட்சுமி, அறந்தாங்கியில் எஸ். முத்துலட்சுமி, மாற்று வேட்பாளராக வி. அனுசியா ஆகியோா் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

மேலும், திருமயம் தொகுதியில் ப. சின்னையா, புதுக்கோட்டையில் கே. கைலாசகுமாா் ஆகியோா் சுயேச்சை வேட்பாளா்களாக வேட்புமனுக்களை அளித்தனா். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான முதல் நாளான திங்கள்கிழமை மொத்தம் 9 போ் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.