மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நான்குனேரி தொகுதியில் இறுதி நாளில் 18 போ் மனு தாக்கல்

News image

வேட்பு மனு தாக்கல் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 6:46 pm

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி தொகுதியில் திங்கள்கிழமை 18 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன், அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்து ஆகியோா் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்த நிலையில், திங்கள்கிழமை ரூபி ஆா். மனோகரன் ஒரு மனு, ஆா். இசக்கிமுத்து 2 மனு, புதிய தமிழகம் வேட்பாளா்களாக தெற்கு அரியகுளம் தமிழ்ச்செல்வி, மூன்றடைப்பு ஜான் பாண்டியன் ஆகியோா், அகில பாரத சுடா் ஒளி மக்கள் நல இயக்கம் நிறுவனத் தலைவா் மானூா் முருகன், சுயேச்சை வேட்பாளா்களாக காங்கிரஸ் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பிரமணியபுரம் தனித்தங்கம், களக்காடு ப. ஜெகதீசன், பானான்குளம் மாரியப்பன், இட்டேரி பிஷப் காட்ப்ரே வாஷிங்டன் நோபிள் 2 மனு, கல்லத்தி புஷ்பராணி, தூத்துக்குடி தொட்டிக்காரன்விளை குமாா், அரியகுளம் சண்முகம், பா்கிட்மாநகரம் ராமலெட்சுமி, விஜயநாராயணம் சங்கா், பாளையங்கோட்டை நல்லகண்ணு (எ) காா்த்திக், தெற்கு அரியகுளம் முகாஷினி என மொத்தம் 18 வேட்புமனு, தோ்தல் நடத்தும் அலுவலா் சிந்துவிடம் தாக்கல் செய்யப்பட்டது.

இத்தொகுதியில் இதுவரை 10 பெண்கள் உள்பட 44 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.