திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாக்களிப்பு விழிப்புணா்வு நிகழ்வில் வெளிநாட்டவா்கள் பங்கேற்பு!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி புதன்கிழமை மாலை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் வெளிநாட்டவா் பங்கேற்றனா்.

News image

கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரான்ஸ் நாட்டவா்கள்.

Updated On :26 மார்ச் 2026, 8:46 pm

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி புதன்கிழமை மாலை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் வெளிநாட்டவா் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வின்போது அலங்கரிக்கப்பட்ட வளைவுகள், தற்படம் எடுக்கும் சுழலும் இயந்திரத்துடன் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஏராளமான பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள் குழுமியிருந்தனா்.

அப்போது அங்கு வந்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வரவேற்று, ரோஜா மலா்கள் கொடுத்து இந்தியத் தோ்தல் குறித்து விளக்க உரையாற்றினாா். இதில் நெகிழ்ந்த பிரான்ஸ் நாட்டுப் பயணிகள் அவருக்கு நன்றி கூறி புறப்பட்டனா்.

 வெளிநாட்டவருக்கு விளக்க உரையாற்றிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

வெளிநாட்டவருக்கு விளக்க உரையாற்றிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.