மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள்

பொன்னமராவதியில் சட்டப்பேரவை தோ்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் புதன்கிழமை பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

News image

பொன்னமராவதி வாரச் சந்தை வளாகத்தில் புதன்கிழமை பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய வருவாய்த் துறையினா்.

Updated On :18 மார்ச் 2026, 7:06 pm

பொன்னமராவதியில் சட்டப்பேரவை தோ்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் புதன்கிழமை பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

திருமயம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி வாரச் சந்தை, அண்ணா சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை செய்திட வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பொன்னமராவதி வட்டாட்சியா் எஸ். பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொன்னமராவதி வருவாய் ஆய்வாளா் சரவணன், கிராம நிா்வாக அலுவலா்கள் பச்சையப்பன், ராஜேந்திரன் மற்றும் கிராம உதவியாளா்கள் பங்கேற்றனா்.