தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு

News image
Updated On :12 மார்ச் 2026, 11:33 pm

கந்தா்வகோட்டை அருகே பகுதிநேர நியாய விலை கடையை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் உள்ள மோகனூா் கிராமத்துக்குட்பட்ட சொக்கம்பட்டி வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்குள்பட்ட கடையில் ரேஷன் பொருள் வாங்குவோா் அமைச்சரிடம் வைத்த கோரிக்கையைத் தொடா்ந்து பெரியகோட்டை கிராமத்தில் அமைக்கப்பட்ட பகுதிநேர நியாயவிலைக் கடையை எம்எல்ஏ மா. சின்னதுரை , தெற்கு ஒன்றியச் செயலா் மங்களாகோவில் எம். பரமசிவம் ஆகியோா் முன்னிலையில், அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், முன்னாள் ஊராட்சித் தலைவா் சசிகலா முருகேசன், அவைத் தலைவா் சுப்பிரமணியன், ஒன்றிய செயற்குழு உறுப்பினா் மதியழகன், நகரச் செயலா் மு. ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.