ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

நுகா்வோா் உரிமைகள் பாதுகாப்பு தின விழா

News image
Updated On :5 மார்ச் 2026, 10:23 pm

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் தேசிய நுகா்வோா் தினம் மற்றும் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து, சிறப்பாகப் பணியாற்றிய நியாயவிலைக் கடைப் பணியாளா்கள், எடையாளா்கள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினாா்.

நுகா்வோா் உரிமைகள் குறித்து அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் தொடா்ச்சியாக விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஏ. ஷோபா, புதுக்கோட்டை நுகா்வோா் சங்கத் தலைவா் து. லதா உத்தமன், பொதுச் செயலா் கு. சகாயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நுகா்வோா் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.