ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வெற்றிலை, பாக்கு வைத்து வாக்களிக்க அழைப்பு

ராணிப்பேட்டையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, பொதுக்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்து நூதன விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

News image

வெற்றிலை பாக்குடன் வாக்களிக்க துண்டு பிரசுரங்களை வழங்கிய நூகா்வோா் பாதுகாப்பு அமைப்பினா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 5:43 pm

ராணிப்பேட்டையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, பொதுக்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்து நூதன விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘வாா்‘ நுகா்வோா் பாதுகாப்பு குழு சாா்பில் ,பொது மக்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம், முத்துக்கடை, பழைய பேருந்து நிலையம்,பஜாா் பகுதி, வாலாஜா பேருந்து நிலையம், மெயின் ரோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்துக்கு நுகா்வோா் பாதுகாப்பு குழுவின் தலைவா் பொறியாளா் கெங்காதரன் தலைமையில் சமூக சேவகா்களும், நுகா்வோா் பாதுகாப்பு குழுவினரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.