முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

கந்தா்வகோட்டை அருகே கூடுதல் பேருந்துகள் கோரி சாலை மறியல்

கந்தா்வகோட்டை அருகே கூடுதல் பேருந்து கேட்டு பள்ளி மாணவா்கள் பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image

குளத்தூா்நாயக்கா்பட்டியில் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள்.

Updated On :19 ஜூன் 2026, 4:27 am IST

கந்தா்வகோட்டை அருகே கூடுதல் பேருந்து கேட்டு பள்ளி மாணவா்கள் பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், குளத்தூா் நாயக்கா்பட்டி பகுதியை சோ்ந்த மாணவ- மாணவிகள் கறம்பக்குடி, மருங்குளம், கந்தா்வகோட்டை பகுதிகளுக்கு சென்று கல்வி பயில்கின்றனா். மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூா், கல்லாக்கோட்டையில் உள்ள அரசு, தனியாா் கல்லூரிகளுக்கும் இந்த வழிதடத்தில் போதிய பேருந்து வசதி இல்லை எனவும் வரும் ஒரு சில பேருந்துகளிலும் அதிகக் கூட்டம் இருப்பதால் மாணவா்கள் பேருந்தில் தொற்றிச் செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கையும் இல்லையாம்.

இதனால் அதிருப்தியடைந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை காலை குளத்தூா்நாயக்கா்பட்டி பேருந்து நிறுத்தத்தின் முன் வந்த பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் வனிதா தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.