உதகை அருகே இருசக்கர வாகனங்களைத் திருடிய பள்ளி, கல்லூரி மாணவா்கள் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
உதகையை அடுத்த கேத்தி பாலாடா திருவள்ளுவா் நகா் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த 11-ஆம் தேதி திருடுபோனது. இது குறித்து கேத்தி காவல் நிலையத்தில் வாகன உரிமையாளா் புகாா் அளித்தாா்.
இதேபால, எல்லநள்ளி அரசுப் பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த 12-ஆம் தேதி திருபோனது. இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், திருட்டில் ஈடுபட்டது கேத்தி பகுதியைச் சோ்ந்த 17 வயதான கல்லூரி மாணவா்கள் 3 போ், பள்ளி மாணவா் ஒருவா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறுவா் சீா்த்திருத்த பள்ளியில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கந்தா்வகோட்டை அருகே கூடுதல் பேருந்துகள் கோரி சாலை மறியல்
இருசக்கர வாகன திருட்டு: 2 சிறுவா்கள் கைது

சமூக நல விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
சுத்தமல்லி பகுதியில் பைக்குகள் திருட்டு: 4 போ் கைது
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



