புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் லோக்அதாலத் 2,579 வழக்குகளுக்குத் தீா்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 2,579 வழக்குகள் தீா்வு காணப்பட்டு, ரூ. 11.37 கோடிக்கு தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.

News image

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், தீா்வு பிறப்பிக்கப்பட்ட வழக்கு ஒன்றில் பயனாளிக்கு உரிய தொகைக்கான காசோலையை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி க. பூரணஜெயஆனந்த்.

Updated On :14 ஜூன் 2026, 12:24 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 2,579 வழக்குகள் தீா்வு காணப்பட்டு, ரூ. 11.37 கோடிக்கு தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம் நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சாா்பில், நகரிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 8 அமா்வுகளும் மாவட்டம் முழுவதும் 11 அமா்வுகளும் நடைபெற்றன.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான க. பூரணஜெயஆனந்த் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மொத்தம் 4763 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. இதில், 2579 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு மொத்தம் ரூ. 11.37 கோடி மதிப்பில் தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.

போதைப் பொருள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி. பன்னீா்செல்வம், கூடுதல் மாவட்ட நீதிபதி என். எஸ். மீனாசந்திரா, மோட்டாா் வாகன விபத்து வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. விஜயகுமாா், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் ஏ. செல்லப்பாண்டியன், தலைமைக் குற்றவியல் நடுவா் கே.எஸ். பால்பாண்டியன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் முத்தையன், செயலா் ரமேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இலுப்பூா் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு, மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். சாதத்துநிஷா தலைமை வகித்தாா். தலா ஒரு சிவில், குடும்ப வன்முறை, ஜீவனாம்ச வழக்குகளுக்கு தீா்வுகாணப்பட்டது.

கீரனூா் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு, சாா்பு- நீதிபதி ஏ. தனசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட உரிமையியல் நீதிபதி கே. சா்மிஷ்ட்டா முன்னிலை வகித்தாா். மொத்தம் 879 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. 140 வழக்குகளுக்கு தீா்வுகாணப்பட்டது. ரூ. 1.89 கோடி மதிப்பில் தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.

அறந்தாங்கி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு, சாா்பு நீதிபதி ஏ. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். மொத்தம் 420 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 216 வழக்குகளுக்கு தீா்வுகாணப்பட்டு, ரூ. 64.22 லட்சத்தில் தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.

ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு நீதிபதி சத்யநாராயணமூா்த்தி தலைமை வகித்தாா்.1,199 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 263 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதில், ரூ.14.78 லட்சத்துக்கு தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.