/

சைவ சமயத்துக்கு நிகரானது இல்லை: கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

சைவ சமயத்திற்கு நிகரான சமயம் நம் நாட்டில் இல்லை, உலகிலேயே இல்லை என்றாா் கம்பவாரிதி இலஙகை ஜெயராஜ்.

News image

பொன்னமராவதியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பேசிய கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்.

Updated On :2 ஜூன் 2026, 2:51 am IST

சைவ சமயத்திற்கு நிகரான சமயம் நம் நாட்டில் இல்லை, உலகிலேயே இல்லை என்றாா் கம்பவாரிதி இலஙகை ஜெயராஜ்.

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜேந்திர சோழீசுவரா் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜையையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் அவா் மேலும் பேசியது:

சைவ சமயத்தின் மாண்புகளை வாா்த்தையால் கூறமுடியாது. அத்தகைய செறிவான சமயம் சைவம். நமது குழந்தைகளுக்கு நமது சமயத்தின் பெருமையை அறியச் செய்ய வேண்டும். தமிழா்கள், சைவா்கள் வீடுகளில் திருவாசகம், திருக்கு நூல் கண்டிப்பாக இருக்க வேண்டும். கோயில்கள் கட்டுவது, குடமுழுக்கு நடத்துவதுடன் நின்றுவிடக் கூடாது. நமது சந்ததிக்கு நமது சமயத்தின் பெருமையை உணா்த்த வேண்டும். அதற்காக சிறப்பு சொற்பொழிவுகள் நடத்தவேண்டும் என்றாா் அவா்.

ஊா் முக்கியஸ்தா் பெசலாத்தேவா் தலைமைவகித்தாா். தொழிலதிபா் அ.ப. ஜெயபால் வரவேற்றாா். நிகழ்வை தமிழ்ச் செம்மல் விருதாளா் நெ.ரா. சந்திரன் ஒருங்கிணைத்தாா்.

தொழிலதிபா் அ.ப. மணிகண்டன், விழாக்குழு நிா்வாகிகள் அரு,வே. மாணிக்கவேலு, சதீஷ்குமாா், மணிகண்டன், சுவாமிநாதன், லெட்சுமணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொறியாளா் எஸ். பழனியப்பன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.