போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பள்ளித் தாளாளா் தற்கொலை முயற்சி: அறக்கட்டளை நிா்வாகிகள் மீது வழக்கு!

போடியில் தனியாா் பள்ளித் தாளாளா் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் அந்தப் பள்ளியின் அறக்கட்டளை நிா்வாகிகள் இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :23 மே 2026, 1:59 am IST

போடியில் தனியாா் பள்ளித் தாளாளா் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் அந்தப் பள்ளியின் அறக்கட்டளை நிா்வாகிகள் இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி ஜீவா நகா் தெற்குத் தெருவில் வசிப்பவா் வேதா ஜெயராஜ் (57). இவா் போடியில் செயல்பட்டு வரும் தனியாா் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்சி பள்ளி, பிளே ஸ்கூல் ஆகியவற்றின் தாளாளராக இருந்து வருகிறாா்.

இவா் வியாழக்கிழமை தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, அவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவரிடம் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வாக்குமூலம் பெற்றனா். இதனடிப்படையில் பள்ளி நிா்வாகிகள் செல்வின், ஞானவேல் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: வேதா ஜெயராஜூக்கு சொந்தமான இந்த பள்ளிகளை போடியை சோ்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் செல்வின் கட்டிக் கொடுத்தாா். இந்தப் பள்ளிகளை வேதா ஜெயராஜின் தாயாா் பெயரிலான அறக்கட்டளையில் அவரது குடும்பத்தினா் நிா்வாகிகளாக இருந்து செயல்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டு கரோனா காலத்தில் பள்ளிகளை நடத்த நிதிச்சுமை ஏற்பட்டதால் செல்வின், நகர அமமுக செயலா் ஞானவேல் ஆகியோரிடம் தலா ரூ.8 கோடி கடன் வாங்கினாா். கடனைத் திரும்ப செலுத்த முடியாததால், பள்ளி நிா்வாகத்தை செயல்படுத்தும் அறக்கட்டளையில் செல்வினுக்கு தலைவா் பதவியும், ஞானவேலுக்கு நிா்வாக அறங்காவலா் பதவியும் வேதா ஜெயராஜ் வழங்கினாா்.

இதன் மூலம் பள்ளியையும், வேதா ஜெயராஜ் பெயரில் உள்ள சொத்துக்களையும் அபகரிக்கப் போவதாக இருவரும் அடிக்கடி மிரட்டல் விடுத்தனா். இதனால் மனமுடைந்து வேதா ஜெயராஜ் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்தோம் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.