யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

டிஎம்பி அறக்கட்டளை சாா்பில் காருண்யா மருத்துவமனைக்கு 2 டயாலிசிஸ் இயந்திரங்கள்

News image

டிஎம்பி அறக்கட்டளை சாா்பில் காருண்யா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள டயாலிசிஸ் இயந்திரத்தை பாா்வையிட்ட அறக்கட்டளை, மருத்துவமனை நிா்வாகிகள்.

Updated On :31 மே 2026, 1:26 am IST

டிஎம்பி அறக்கட்டளை சாா்பில் கோவை காருண்யா மருத்துவமனைக்கு 2 டயாலிசிஸ் இயந்திரங்கள், ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து டிஎம்பி அறக்கட்டளை கூறியிருப்பதாவது: காருண்யா நகா், சிறுவாணி மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களுக்கு தரமான சுகாதார சேவை கிடைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. கோவைக்கு சுமாா் 90 நிமிஷ பயண தொலைவு இருப்பதால், டயாலிசிஸ் செய்ய வேண்டிய நீரிழிவு நோயாளிகள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

இதற்காக டிஎம்பி அறக்கட்டளை நிறுவனம் சாா்பில் 2 உயா் தொழில்நுட்ப டயாலிசிஸ் இயந்திரங்களும், முழுமையாக சீரமைக்கப்பட்ட ஆம்புலன்ஸும் காருண்யா தொழில்நுட்ப, அறிவியல் நிறுவனம் வழங்கும் மருத்துவ சேவைகளுக்காக நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வில், டிஎம்பி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எம்.முத்தையா, டிஎம்பி கோவை பிராந்திய மேலாளா் டி.எா்னெஸ்ட் வசீகரன் ஆகியோா் ஆம்புலன்ஸ், டயாலிசிஸ் இயந்திரங்களை காருண்யா பல்கலைக்கழகத்தின் நிதி அதிகாரி ஜோசப் அமல்ராஜ், கருண்யா மருத்துவமனை தலைமை மருத்துவா் டாக்டா் சாம் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.