/

972 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட 9 பள்ளிகளைச் சோ்ந்த 972 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

News image
Updated On :12 ஜனவரி 2026, 11:33 pm

Syndication

பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட 9 பள்ளிகளைச் சோ்ந்த 972 மாணவா்களுக்கு திங்கள்கிழமை விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா்.

தொடா்ந்து பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி, ஆலவயல், மேலைச்சிவபுரி, நல்லூா், காரையூா், மேலத்தானியம், சடையம்பட்டி, நகரப்பட்டி என 9 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சாா்ந்த 972 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் கூ.சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலா் ஆரோக்கியராஜ், பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், பேரூராட்சி துணைத் தலைவா் கா.வெங்கடேஷ், திமுக ஒன்றியச் செயலா்கள் அ.அடைக்கலமணி, அ.முத்து, நகரச்செயலா் அ. அழகப்பன், பள்ளி துணை ஆய்வாளா் குரு.மாரிமுத்து, பேரூராட்சி உறுப்பினா் புவனேஸ்வரி காளிதாஸ் மற்றும் பள்ளி தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா். நிறைவாக புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் கி.நிா்மலா நன்றி கூறினாா்.