/

அரசுப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

News image
மாணவருக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம்.
Updated On :6 பிப்ரவரி 2026, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயகுமாா் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி தலைமையாசிரியா் சந்திரசேகரன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம் பங்கேற்று 500 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் சுகுணா செந்தில், நரசிங்கபுரம் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.