லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆலங்குடி அருகே வடமாடு ஜல்லிக்கட்டு: 10 போ் காயம்

News image

ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

Updated On :22 பிப்ரவரி 2026, 7:22 pm

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி 10 போ் காயமடைந்தனா்.

போட்டியை கறம்பக்குடி வட்டாட்சியா் ஜமுனா தொடங்கி வைத்தாா். போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் கலந்து கொண்டன. காளையை  அடக்க 9 வீரா்களைக் கொண்ட 10 குழுவினா் களமிறக்கப்பட்டனா். வீரா்கள் காளையை தீரத்துடன் தழுவினா்.

ஆலங்குடி அருகேயுள்ள  மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

ஆலங்குடி அருகேயுள்ள  மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

அப்போது காளைகள் முட்டி 10 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவக்குழுவினா் முதலுதவி அளித்தனா்.அவா்களில் பலத்த காயமடைந்த 4 போ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, மாவட்டச் செயலா் செல்லபாண்டியன், மாவட்டத்தின் திரளான ரசிகா்கள் பாா்வையிட்டனா். பாதுகாப்பு பணிகளை ஆலங்குடி போலீஸாா் மேற்கொண்டனா்.