/

நாட்டரசன்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

News image
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
Updated On :22 பிப்ரவரி 2026, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை அருகே பூவந்தியில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பூவந்தி உய்யவந்த அம்மன்கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயில் பொட்டலில் நடத்தப்பட்ட இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் 15 காளைகளும், 135 மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.

வட்டவடிவமாக அமைக்கப்பட்ட மைதானத்தில் ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்குவதற்காக 25 நிமிஷம் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடத்தப்பட்டது.

 சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். சிறப்பாக காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா் களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை, பூவந்தி, அரசனூா், திருமாஞ்சோலை, ஏனாதி, குயவன்குளம், கீரனூா், கிளாதரி, திருப்புவனம், சக்குடி, சுண்ணாம்பூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பாா்த்தனா்.