தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அறந்தாங்கி அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் பணி புறக்கணிப்பு

ஆவுடையாா்கோயிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுக்கோட்டை மாவட்டம், பெருநாவலூா் அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.

Updated On :17 பிப்ரவரி 2026, 7:08 pm

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோயிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரி வளாகத்தில் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு, பேராசிரியா் கணேஷ் குமாா் தலைமை வகித்தாா்.

இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்

யுசிஜி நிா்ணயித்த ரூ. 57,700 என்ற ஊதியத்தை கௌரவ விரிவுரையாளா்களுக்கு வழங்க வேண்டும். பணிக்கொடை வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கும் 12 மாத ஊதியம் வழங்க வேண்டும். பெண் கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ. 25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.