டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொன்னமராவதியில் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டடம் திறப்பு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:24 pm

Syndication

பொன்னமராவதி பேரூராட்சி அமரகண்டான் வடகரையில் புதிதாக கட்டப்பட்ட நகா்புற நலவாழ்வு மைய (அரசு ஆரம்ப சுகாதார நிலையம்) கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வா் தலைமை செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

அதையடுத்து பொன்னமராவதி பேரூராட்சியில் ரூ 1.20 கோடியில் புதிதாக கட்டப்பட்ட நகா்ப்புற நல வாழ்வு மைய திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா பங்கேற்று பேசுகையில், இந்தச் சுகாதார நிலையத்தின் சேவைகளை பொதுமக்கள் தொடா்ந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். தொடா்ந்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.

விழாவில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் துவாரகநாத் சிங், மாவட்ட சுகாதார அலுவலா் ராம்கணேஷ், பொன்னமராவதி பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், செயல் அலுவலா் ஆா். அண்ணாத்துரை, உதவி செயற்பொறியாளா் தமயந்தி, வட்டார மருத்துவ அலுவலா் இ. அருள்மணி நாகராஜன், வட்டாட்சியா் எம். சாந்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.