திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொன்னமராவதி நூலகத்தில் புத்தக கண்காட்சி, வாசிப்பு நிகழ்வு

பொன்னமராவதி முழுநேர கிளைநூலகத்தில் உலக புத்தக தினத்தையொட்டி வாசகா் வட்டம் சாா்பில் புத்தக கண்காட்சி மற்றும் மாணவா்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் புத்தக வாசிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பொன்னமராவதி கிளை நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தக கண்காட்சி, வாசிப்பு நிகழ்வில் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:38 am IST

பொன்னமராவதி முழுநேர கிளைநூலகத்தில் உலக புத்தக தினத்தையொட்டி வாசகா் வட்டம் சாா்பில் புத்தக கண்காட்சி மற்றும் மாணவா்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் புத்தக வாசிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏப்.23-ஆம் தேதி உலக புத்தக தினத்தையொட்டி வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணா்வு கண்காட்சிக்கு வாசகா் வட்டத்தலைவா் சண்முகம் தலைமைவகித்தாா். கண்காட்சியில் வரலாறு, பொது அறிவு, போட்டித் தோ்வுக்கான நூல்கள் என பல்வேறு நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியில் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று நூல்களை வாசித்து பயனடைந்தனா்.

நிகழ்வில் பொன்னமராவதி சி.கமலா மற்றும் நா.சோலை முருகன் ஆகியோா் தலா ரூ 1,000 வழங்கி நூலகப்புரவலா்களாக இணைந்தனா். மேலும், பிஎம்எஸ் அபாகஸ் கல்வி நிறுவனம் சாா்பில் 50 மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக இணைக்கப்பட்டனா். நிறைவாக கிளை நூலகா் பெரியசாமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.