தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மழையூரில் நாம் தமிழா் கட்சி பிரசார வாகனம் தீக்கிரை

கறம்பக்குடி அருகேயுள்ள மழையூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் பிரசாரத்தில் ஈடுபட்ட சுமை ஆட்டோ செவ்வாய்க்கிழமை தீக்கிரையானது.

News image
Updated On :21 ஏப்ரல் 2026, 7:09 pm

கறம்பக்குடி அருகேயுள்ள மழையூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் பிரசாரத்தில் ஈடுபட்ட சுமை ஆட்டோ செவ்வாய்க்கிழமை தீக்கிரையானது.

புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் அரசிக்கு வாக்குச்சேகரிக்கும் வகையில் சுமை ஆட்டோவில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டு மழையூா் பகுதியில் பிரசாரம் நடைபெற்றுள்ளது. வாகனத்தை புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகா்ணத்தைச் சோ்ந்த ஹரி (42) என்பவா் ஓட்டியுள்ளாா். மழையூா் கடைவீதியில் வாகனம் சென்றபோது, வாகனத்தின் பின்புறத்தில் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியுள்ளது. இதைப் பாா்த்து அப்பகுதி மக்கள் கூச்சலிடவே, வாகனத்தில் இருந்து ஓட்டுநா் இறங்கியுள்ளாா். தொடா்ந்து, வாகனம் முழுவதும் எரியத் தொடங்கியது.

இதுகுறித்த தகவலையடுத்து விரைந்து சென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைத்தனா். இருப்பினும் வாகனம் முழுவதும் தீக்கிரையானது.

இதுகுறித்து மழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.