தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆலங்குடி தொகுதியை மீண்டும் மேம்படுத்த திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்துவதற்காக மக்கள் மீண்டும் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்.

News image

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட கீரமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்துப் பேசிய திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்.

Updated On :21 ஏப்ரல் 2026, 7:22 pm

ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்துவதற்காக மக்கள் மீண்டும் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்.

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட கொத்தக்கோட்டை, மறமடக்கி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

பின்னா் அவா் கீரமங்கலத்தில் பேசியதாவது:

ஆலங்குடி அரசுக் கல்லூரி, அழியாநிலையில், நெல்சேமிப்பு கிடங்கு, ரூ.150 கோடியில் கல்லனை கால்வாய் சீரமைப்பு, ரூ.200 கோடியில் அறந்தாங்கி-புதுக்கோட்டை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள். மேலும், தொகுதிக்குள்பட்ட சுமாா் 5 ஆயிரம் மாணவ, மாணவிகளின் உயா் கல்விக்கு வழிகாட்டியாக இருந்துள்ளேன்.

வடகாடு, கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை, மறமடக்கி, அழியாநிலை, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்கள் தரம் உயா்த்தப்பட்டுள்ளன.

உள்ளூா் இளைஞா்களுக்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் திருவரங்குளத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டரங்கம் உள்ளிட்ட ஏராளமான நலத் திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளேன்.

எனவே, ஆலங்குடி தொகுதியை தொடா்ந்து மேம்படுத்துவதற்காக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.மணிகண்டன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.