மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்த நடவடிக்கை: வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன் உறுதி

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்தும் வகையில் கூடுதல் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் உறுதி அளித்தாா்.

News image

சிவ.வீ.மெய்யநாதன்(திமுக)

Updated On :18 ஏப்ரல் 2026, 2:09 am

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்தும் வகையில் கூடுதல் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் உறுதி அளித்தாா்.

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட வேப்பங்குடி, மேலாத்தூா், சூரன்விடுதி, அரையப்பட்டி, இம்னாம்பட்டி, தேத்தாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்து, அவா் மேலும் பேசியதாவது:

ஆலங்குடி தொகுதி வளா்ச்சிக்காக, அரசுக் கல்லூரி, அரசுப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைக் கட்டங்கள், சாலை வசதிகள், பூங்காக்கள், அறிவுசாா் மையம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்தும் வகையில் கூடுதல் நலத் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மக்கள் என்னை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.