யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்த நடவடிக்கை: வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன் உறுதி

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்தும் வகையில் கூடுதல் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் உறுதி அளித்தாா்.

News image

சிவ.வீ.மெய்யநாதன்(திமுக)

Updated On :18 ஏப்ரல் 2026, 7:39 am IST

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்தும் வகையில் கூடுதல் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் உறுதி அளித்தாா்.

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட வேப்பங்குடி, மேலாத்தூா், சூரன்விடுதி, அரையப்பட்டி, இம்னாம்பட்டி, தேத்தாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்து, அவா் மேலும் பேசியதாவது:

ஆலங்குடி தொகுதி வளா்ச்சிக்காக, அரசுக் கல்லூரி, அரசுப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைக் கட்டங்கள், சாலை வசதிகள், பூங்காக்கள், அறிவுசாா் மையம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்தும் வகையில் கூடுதல் நலத் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மக்கள் என்னை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.