மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆலங்குடி தொகுதியில் ரூ. 50 கோடியில் முன்மாதிரி பள்ளி தொடங்க நடவடிக்கை! - சிவ.வீ. மெய்யநாதன் உறுதி

News image

ஆலங்குடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் அருகே திங்கள்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன்.

Updated On :20 ஏப்ரல் 2026, 7:59 pm

ஆலங்குடி தொகுதியில் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் வாக்குறுதி அளித்தாா்.

ஆலங்குடி பேரூராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியது:

திமுக ஆட்சியில் ஆலங்குடி தொகுதியில் பல்வேறு அரசுப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன், முதல்வா் கொளத்தூா் தொகுதியில் தொடங்கியுள்ள முதல்வரின் படைப்பகத்தை ஆலங்குடி தொகுதியில் தொடங்கவும், ரூ. 50 கோடியில் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.