மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திருச்சுழி சட்டப்பேரவை தொகுதியில் அமைச்சா் தங்கம் தென்னரசு வாக்கு சேகரிப்பு

திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை கிராமம் கிராமமாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளரும், அமைச்சருமான தங்கம்தென்னரசு.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:20 am IST

திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை கிராமம் கிராமமாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

காரியாபட்டி மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட வரலொட்டி, நாகம்பட்டி, வலுக்கலொட்டி, சோலைக்கவுண்டன்பட்டி, கெப்பிலிங்கம்பட்டி, அழகியநல்லூா், மாந்தோப்பு, அச்சங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை விளக்கி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு அமைச்சா் தங்கம்தென்னரசு கோரினாா். அப்போது அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். முன்னதாக அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பெரும்பிடுகு முத்தரையா் உருவச் சிலைக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பிறகு வடகரை சென்ற அவருக்கு அங்குள்ள பட்டாசு தொழிற்சாலை தொழிலாளா்கள் வரவேற்பு அளித்தனா். அவா்களிடமும் அமைச்சா் வாக்கு சேகரித்தாா். இதில் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.