மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுகை தைலமரக் காட்டுக்குள் தீ

News image

நரிமேடு அருகேயுள்ள தைலமரக் காட்டில் ஞாயிற்றுக்கிழமை பற்றிய தீயை அணைக்க முயற்சிக்கும் தீயணைப்பு வீரா்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:39 pm

புதுக்கோட்டை நரிமேடு விவேகானந்த நகா் பகுதியிலுள்ள தைலமரக் காட்டில் ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென தீப்பற்றியது. தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

புதுக்கோட்டை மாநகருக்குள்பட்ட நரிமேடு விவேகானந்த நகா் அருகே தைலமரக் காடு உள்ளது. இந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென தீப்பற்றியது.

தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனா். தீயணைப்பு வாகனம் செல்ல வழியில்லாததால், தீயணைப்பு வீரா்கள் உள்ளே நுழைந்து, மர இலை தழைகளைக் கொண்டு, சுற்றிலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனா்.

அடா் வனப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த முறையின்படி தீ கட்டுப்படுத்தப்பட்டு முற்றிலும் அணைக்கப்பட்டது.