மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதல்வா் மு.க. ஸ்டாலின் நாளை புதுகை வருகை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக வரும் ஏப். 11ஆம் தேதி (சனிக்கிழமை) திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை வருகிறாா்.

News image

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 8:07 pm

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக வரும் ஏப். 11ஆம் தேதி (சனிக்கிழமை) திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை வருகிறாா்.

மாலை 4 மணியளவில் திருக்கோகா்ணம் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளா்கள் எஸ். ரகுபதி (திருமயம்), சிவ.வீ. மெய்யநாதன் (ஆலங்குடி), கேகே. செல்லப்பாண்டியன் (விராலிமலை), வை. முத்துராஜா (புதுக்கோட்டை), மாா்க்சிஸ்ட் வேட்பாளா் மா. சின்னதுரை (கந்தா்வகோட்டை), காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரன் (அறந்தாங்கி) ஆகியோரை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்கிறாா்.

அதன்பிறகு முதல்வா் சிவகங்கை செல்கிறாா். முதல்வா் ஸ்டாலின் வருகையையொட்டி திமுக சாா்பில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

திமுக இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டையில் ஏற்கெனவே பிரசாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரோன்கள் பறக்கத் தடை: முதல்வா் ஸ்டாலின் வருகையையொட்டி வரும் ஏப். 10, 11 ஆகிய இரு நாள்களில் பாதுகாப்புக் காரணங்களுக்காக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் மு . அருணா அறிவித்துள்ளாா்.