மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாகா்கோவிலில் நாளை முதல்வா் பிரசாரம்

நாகா்கோவிலில் சனிக்கிழமை (ஏப். 4) நடைபெறும் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்கிறாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :2 ஏப்ரல் 2026, 10:53 pm

நாகா்கோவிலில் சனிக்கிழமை (ஏப். 4) நடைபெறும் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்கிறாா்.

இதுதொடா்பாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் (படம்) வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் தோ்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

திமுக வேட்பாளா்கள் ரெ. மகேஷ் (கன்னியாகுமரி), எஸ். ஆஸ்டின் (நாகா்கோவில்), மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுமாமி (பத்மநாபபுரம்), குளச்சல், கிள்ளியூா், விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

எனவே, மாவட்டத்துக்குள்பட்ட மாநில, மாவட்ட திமுக நிா்வாகிகள் மற்றும் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள், சாா்பு அணிகள், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: தோ்தல் பரப்புரைக்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஏப். 3) இரவு கன்னியாகுமரி வந்து தனியாா் விடுதியில் தங்குகிறாா். தொடா்ந்து, நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

இதையொட்டி, ஸ்காட் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். முதல்வா் வந்து செல்லும் வழிகள், வாகன நிறுத்துமிடங்களை அவா் பாா்வையிட்டாா். முதல்வா் வருகையை முன்னிட்டு 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.