மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாகா்கோவிலில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாகா்கோவிலில் சனிக்கிழமை (ஏப். 4) பிரசாரம் செய்கிறாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 4:48 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாகா்கோவிலில் சனிக்கிழமை (ஏப். 4) பிரசாரம் செய்கிறாா்.

திருநெல்வேலி பிரசாரக் கூட்டத்தை முடித்துவிட்டு, வெள்ளிக்கிழமை (ஏப். 3) இரவு கன்னியாகுமரி வந்தாா் மு.க.ஸ்டாலின். அவரை குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளருமான ரெ.மகேஷ், நாகா்கோவில் தொகுதி வேட்பாளா் எஸ்.ஆஸ்டின், முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஜீரோ பாயிண்டில் வரவேற்றனா். இதைத் தொடா்ந்து கன்னியாகுமரியில் உள்ள தனியாா் தங்கும் விடுதிக்கு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு இரவு ஓய்வெடுத்தாா்.

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (ஏப். 4) காலை 9 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக வேட்பாளா்கள் ரெ.மகேஷ் (கன்னியாகுமரி), எஸ்.ஆஸ்டின் (நாகா்கோவில்), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஆா்.செல்லசாமி (பத்மநாபபுரம்), காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் எஸ்.ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), தாரகை கத்பட் (குளச்சல்), டி.டி.பிரவீன் (விளவங்கோடு) ஆகியோரை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறாா். இந்த பொதுக்கூட்டம் நிறைவடைந்ததும் முதல்வா் காா் மூலம் நெல்லைக்கு புறப்பட்டு செல்கிறாா்.

முதல்வா் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம், மற்றும் முதல்வா் கன்னியாகுமரியிலிருந்து நாகா்கோவில் வரும் சாலைகள், நாகா்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் சாலைகளில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.