மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இன்று பிரசாரம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இன்று பிரசாரம்...

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 11:29 pm

திருவாரூரில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) பிரசாரம் செய்கிறாா்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, திருவாரூரில் திமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன், மன்னாா்குடியில் திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சருமான டி.ஆா்.பி. ராஜா, திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அக்கட்சியின் மாநில நிா்வாகக்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினருமான க. மாரிமுத்து, நன்னிலத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் வி.எம்.எஸ். முகமது முபாரக் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இவா்களை ஆதரித்து திருவாரூா் தெற்குவீதியில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று, வாக்குகள் சேகரிக்கிறாா்.

முன்னதாக திருவாரூருக்கு வரும் அவா் காட்டூரில் உள்ள அவரது பாட்டியின் நினைவிடத்திலும், கலைஞா் கோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்துகிறாா். பின்னா், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா். இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி செல்கிறாா்.