மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அறந்தாங்கியில் எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் முன் விரோதம் காரணமாக எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :7 ஏப்ரல் 2026, 7:00 pm

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் முன் விரோதம் காரணமாக எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

அறந்தாங்கி இடையாா் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மகன் சின்னக்கருப்பு (48). எலக்ட்ரீசியன். இவரை ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என குடும்பத்தினா் தேடி வந்தனா்.

இந்நிலையில், இடையாா் பாலம் அருகே தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் அவா் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

இச்சம்பவத்தை கண்டித்து அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே சின்னக்கருப்பின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புகாரின் பேரில் அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், சின்னக்கருப்புக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கே.விஸ்வநாதன் (47) குடும்பத்தினருக்கும் இடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக விஸ்வநாதன் மற்றும் சிலா் அவரை அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து விஸ்வநாதன் உள்ளிட்டோரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.