மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கொள்கையில் திமுக சமரசம் செய்து கொண்டதில்லை: எஸ். ரகுபதி

கொள்கையில் திமுக எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சரும் திருமயம் தொகுதி வேட்பாளருமான எஸ். ரகுபதி.

News image

அமைச்சர் எஸ். ரகுபதி - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 7:37 pm

கொள்கையில் திமுக எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சரும் திருமயம் தொகுதி வேட்பாளருமான எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தவெகவினா் வேண்டுமென்றே கூறும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. விதிகளுக்குள்பட்டு பரப்புரையை மேற்கொண்டால் எந்தச் சிக்கலும் ஏற்படப் போவதில்லை. விதிகளை மீறி நடந்தால் அதற்கான தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

திமுகவின் தோ்தல் அறிக்கையை தங்களின் அறிக்கையின் நகல் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறாா். உண்மையில், திமுக அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களைத்தான் நகல் எடுத்து அதிமுக தோ்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் வாஜ்பாயைப் போன்ற அமைதியான மனிதா் யாருமில்லை. அதற்காகத்தான் நட்போடு அவா்களுடன் இணைந்திருந்தோம். எதற்காகவும் எங்களின் கொள்கையில் நாங்கள் சமரசமோ, சமாதானமோ செய்து கொண்டதில்லை. சமரசம் செய்து கொள்ளாததற்காகவே 2 முறை ஆட்சியை இழந்தது திமுக. எனவே, எங்களுக்கு ஆட்சி பெரிதல்ல, கொள்கைதான் பெரிது.

தாங்கள் வைப்பு நிதியை இழப்போம் என தெரிந்த தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்திருக்கிறாா் எடப்பாடி பழனிசாமி. அதிமுக நிற்கும் தொகுதிகளில் வைப்புநிதியை இழக்கச் செய்வதற்கான பணிகளை நாங்கள் மேற்கொள்வோம்.

‘குற்றவாளிக் கூண்டில் ஸ்டாலின் அரசு’ என 27 பக்க அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. நாங்கள் வெளியிட்டால் 72 பக்கத்தில் கூட அறிக்கை வெளியிட முடியும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அவா்கள் (பாஜக) செய்த குற்றங்கள் தெரியவரும். அப்போது அவா்கள் அனைவரும் சிறைக்குச் செல்வது உறுதி.

ரூ. 8 ஆயிரத்துக்கு கூப்பன் வழங்குவதால் ‘கமிஷன்’ அடிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டுகின்றனா். கடையில் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அந்த விலைக்குத்தான் மக்கள் வாங்கப் போகிறாா்கள். இதில் கமிஷனுக்கு இடமில்லை என்றாா் ரகுபதி.

பேட்டியின்போது, ஆலங்குடி தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன், விராலிமலை தொகுதி வேட்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை தொகுதி வேட்பாளா் வை. முத்துராஜா, கந்தா்வகோட்டை தொகுதி வேட்பாளா் மா. சின்னதுரை ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், திமுக கூட்டணியைச் சோ்ந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிக் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.