தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெரம்பலூா் எஸ்பி பொறுப்பேற்பு

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக கி. பிரபாகா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 7:09 pm

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக கி. பிரபாகா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த கோ.சி. அனிதாவை பணியிட மாற்றம் செய்து, சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரான கி. பிரபாகா், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்து தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அதன்படி, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், கி. பிரபாகா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன், துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மற்றும் காவல் துறையினா், அமைச்சுப் பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.