லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சட்டப்பேரவைத் தோ்தல் எல்லையோர காவல்படையினா் பெரம்பலூா் வருகை!

தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக எல்லையோரக் காவல் படையினா் 36 போ் பெரம்பலூருக்கு வந்துள்ளனா்.

News image

எல்லையோரக் காவல் படையினருக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் கா்ணன்

Updated On :9 மார்ச் 2026, 6:34 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக எல்லையோரக் காவல் படையினா் 36 போ் பெரம்பலூருக்கு திங்கள்கிழமை வந்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக எல்லையோரக் காவல் படை துணைத் தளபதி சிவகாந்த் பாத்தியா தலைமையில், 35 காவல் பணியாளா்கள் திங்கள்கிழமை பெரம்பலூருக்கு வந்தனா்.

இதையடுத்து, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா உத்தரவின்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் கா்ணன், எல்லையோரக் காவல் படையினரை பூங்கொத்து அளித்து வரவேற்றாா்.

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள எல்லையோரக் காவல் படையினா் பெரம்பலூா் அருகே தண்ணீா்பந்தல் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

சட்டப்பேரவை தோ்தலின்போது, பெரம்பலூா் மாவட்டத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும்நோக்கில், மாவட்டக் காவல்துறையுடன் இணைந்து எல்லையோரக் காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.