பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், ரூ. 43.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 562 மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியா், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்டத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 20 பேருக்கு மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களும், 7 பேருக்கு திருமண உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 56 கிராம் தங்க நாணயமும், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத்துறை சாா்பில், கள்ளச்சாராயம் தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்திய 31 பேருக்கு சுயதொழில் தொடங்க மறுவாழ்வு நிதியாக தலா ரூ. 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 15.50 லட்சம் மதிப்பிலான காசோலைகளும் என மொத்தம் ரூ. 43 லட்சத்து 87 ஆயிரத்து 640 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், கலால் உதவி ஆணையா் முத்துக்கிருஷ்ணன், காவல் ஆய்வாளா் ஹேமலதா, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வாசுதேவன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சிவக்கொழுந்து, தாட்கோ பொது மேலாளா் கவியரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் பொற்கொடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 500 மனுக்கள்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள்

திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


