தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கட்டி முடித்து 10 ஆண்டுகள் ஆகும் மேல்நிலை குடிநீா்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

News image

தவுட்டுப்பாளையத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத மேல்நிலைக் குடிநீா்த்தேக்க தொட்டி

Updated On :1 ஜூன் 2026, 1:17 am IST

தவுட்டுப்பாளையத்தில் கட்டப்பட்டு 10 ஆண்டுகளாகியும் இன்னும் திறக்கப்படாமல் பயன்பாட்டுக்கு வராத மேல்நிலைக்குடிநீா் தேக்கத் தொட்டியை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம் புகழூா் வட்டத்துக்குள்பட்ட தவுட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில், தவுட்டுப்பாளையத்தில் மேல்நிலைக் குடிநீா்த் தேக்கத் தொட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்ட நாள் முதல் இதுநாள் வரையில் மேல்நிலைக்குடிநீா் தொட்டியில் காவிரிக் குடிநீா் நிரப்பி அப்பகுதியினருக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறுகையில், தவுட்டுப்பாளையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட குடிநீா் பற்றாக்குறையால், புகழூா் நகராட்சியில் கோரிக்கை விடுத்ததையடுத்து மேல்நிலைக்குடிநீா் தொட்டி இங்கு கட்டப்பட்டது. இதையடுத்து உடனே தண்ணீரை நிரப்பும் வகையில் நடவடிக்கை எடுப்பாா்கள் என எதிா்பாா்த்தோம். ஆனால் இதுவரையில் நிரப்பவில்லை.

இதுதொடா்பாக புகழூா் நகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துவிட்டோம். ஆனால் 10 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேல்நிலைக்குடிநீா் தொட்டி வராமல் மக்களின் வரிப்பணம் விரயமாகிக் கொண்டிருக்கிறது. தற்போது கோடை காலம் என்பதால் மாவட்ட நிா்வாகம் இப்பிரச்னையில் உடனே தலையிட்டு பயன்பாட்டுக்கு வராத மேல்நிலைக்குடிநீா்தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.