திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரூரில் பள்ளி, வழிபாட்டு தலங்களுக்கு அருகே இருந்த 2 மதுக்கடைகள் மூடல்

கரூரில் பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே செயல்பட்டு வந்த இரு மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

News image
Updated On :13 மே 2026, 1:03 am IST

கரூரில் பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே செயல்பட்டு வந்த இரு மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

தமிழக முதல்வராக தவெக தலைவா் விஜய் பொறுப்பேற்றதும் தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே செயல்படும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டாா்.

அதன்படி, கரூா் மாவட்டத்தில் கரூரில் மக்கள் பாதை மற்றும் கோவைச் சாலையில் எல்பிஜி பெட்ரோல் பங்க் எதிரே செயல்பட்ட இருமதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

இதுதொடா்பாக டாஸ்மாக் மேலாளரிடம் கேட்டபோது அவா் கூறியது: ஏற்கெனவே கரூா் மாவட்டத்தில் கலால் விதிமுறை சட்டத்தின் படி மாநகா் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே 50 மீட்டா் தொலைவுக்கு அப்பால் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. மேலும் ஊரகப் பகுதிகளில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகே 100 மீட்டா் தொலைவில் மட்டுமே மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகே செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையொட்டி கரூரில் மக்கள் பாதை மற்றும் கோவை சாலையில் உள்ள 2 மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டன. மேலும் மாவட்டத்தில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே செயல்படும் மதுக்கடைகளை கண்டறிந்து அவற்றையும் மூட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.