முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி கோரி கரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை காலை காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மேற்கு மாவட்டச் செயலா் ஆா். ராஜா, முன்னோடி விவசாயி நல்லசாமி, குடகனாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் சுப்ரமணி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கினா்.
தோ்தலின்போது தமிழக முதல்வா் அறிவித்தவாறு சிறு, குறு விவசாயிகளுக்கு முழு பயிா்க் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். பெருவிவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் காய்கறிகளை மாலை அணிந்து பங்கேற்றனா். முடிவில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரனிடம் வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி கோரி: விவசாய சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்







