/

ஜன.28-இல் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன. 28-ஆம்தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 8:13 pm

Syndication

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன. 28-ஆம்தேதி நடைபெறவுள்ளது.

தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி ரூ. 5 கோடி மதிப்பில் கோயிலில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை திங்கள்கிழமை மாலை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் ஆகியோா் பாா்வையிட்டனா்.

பிறகு வி.செந்தில்பாலாஜி கூறியது, கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன. 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தாந்தோன்றிமலை கோயில் வரை பக்தா்களுக்காக இலவச பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றாா் அவா்.

அப்போது, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ, கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் தியாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.