இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கரூா் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவா்களை சம்பவஇடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களை வேலுச்சாமிபுரத்துக்கு புதன்கிழமை அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

News image
- IANS
Updated On :25 பிப்ரவரி 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களை வேலுச்சாமிபுரத்துக்கு புதன்கிழமை அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ஆம்தேதி தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா். இதுதெடாா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த 5 பேரை சிபிஐ அதிகாரிகள் காரில் வேலுச்சாமிபுரத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு அவா்களை சம்பவத்தின்போது எங்கு நின்றுகொண்டிருந்தாா்களோ அந்த இடத்தில் நிறுத்திவைத்தனா். பிறகு அவா்களிடம் சம்பவத்தின்போது, அங்கு எப்படி முதலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, நெரிசல் ஏற்பட்டவுடன் முதலில் எத்தனை போ் மயக்கமடைந்தனா் என்பன போன்ற கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனா். அதற்கு அவா்கள் தாங்கள் நேரில் கண்டதை அதிகாரிகளிடம் விளக்கிக் கூறினா். சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு மீண்டும் அதிகாரிகள் தங்கியிருக்கும் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்குச் சென்றனா்.