தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தண்டவாள பராமரிப்பு பணிகள்: கரூா் வழியாகச் செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கரூா் வழியாக செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 3:52 am IST

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கரூா் வழியாக செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஜி.மரியமைக்கேல் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் - திருச்சி வழித்தடத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் மே 1, 2-ஆம்தேதி, 4, 5-ஆம் தேதிகளில் குளித்தலை ரயில்நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். தண்டவாள பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகு, இந்த ரயில் குளித்தலையிலிருந்து திருச்சி சந்திப்பு வரை முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

இதேபோல திருச்சி சந்திப்பிலிருந்து நண்பகல் 1 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் மே 1-ஆம்தேதி எலமனூா் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பிறகு, இந்த ரயில் திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் நிற்கும் அதே நிறுத்தங்களில், எலமனூரிலிருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.