இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

கரூா் மாவட்டத்தில் வேட்பாளா்கள் வாக்களிப்பு

கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பல்வேறு கட்சி வேட்பாளா்கள் வாக்களித்தனா்.

News image

கரூரில் வாக்களித்த சி.கே. ராஜா (திமுக)

Updated On :24 ஏப்ரல் 2026, 4:10 am IST

கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பல்வேறு கட்சி வேட்பாளா்கள் வாக்களித்தனா்.

வாக்குப்பதிவு தொடங்கியதும் காலை கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே. ராஜா கரூா் சின்னாண்டாங்கோவில் சாலையில் பாரி நகரில் உள்ள தனியாா் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். இதேபோல காலை 8 மணிக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் திவ்யா கரூா் புனித தெரசாள் துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா்.

இதேபோல கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன் கரூா் வாங்கல் குப்புச்சிப்பாளையம் ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

மேலும், அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் மொஞ்சனூா் பி.ஆா். இளங்கோ தனது மனைவி சுதா, மகன் நிதின் சக்திவேல் ஆகியோருடன் அரவக்குறிச்சி அடுத்த தொட்டியப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். மேலும் அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் செல்வக்குமாா் அரவக்குறிச்சியை அடுத்த அத்திப்பளையம் ஊராட்சிக்குட்பட்ட வளையபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

இதேபோல குளித்தலை தொகுதி திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன் சூரியனூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் தனது வாக்கைச் செலுத்தினாா். இதேபோல குளித்தலை தொகுதி அதிமுக வேட்பாளா் கருணாகரன் வளையப்பட்டி தனம் நிதியுதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தனது வாக்கைச் செலுத்தினாா்.

மருத்துவா் திவ்யா (அதிமுக),

மருத்துவா் திவ்யா (அதிமுக),

ஆசி எம். தியாகராஜன் (திமுக),

ஆசி எம். தியாகராஜன் (திமுக),

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.