மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் சி.கே.ராஜா புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கடவூா் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட செவலூரில் புதன்கிழமை வாக்கு சேகரித்த கிருஷ்ணராயபுரம் வேட்பாளா் சி.கே.ராஜாவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கும் பெண்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:15 pm

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் சி.கே.ராஜா புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வா் கலைஞரால் 2008-இல் கொண்டு வரப்பட்டது மாயனூா் கதவணை. இந்த கதவணையில் தேக்கி வைக்கப்படும் 1 டிஎம்சி தண்ணீரால் இப்போது 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

காவிரி-வைகை-குண்டாறு நதி நீா் இணைப்புத்திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திமுக ஆட்சி அமைத்தவுடன் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். எனவே, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.

பிரசாரத்தில் தெற்கு ஒன்றியச் செயலா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.