மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் ப. ராணி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் ப. ராணி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:44 pm

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் ப. ராணி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் அக்கட்சியின் மாநில மகளிா் தொண்டரணி செயலாளா் ப. ராணி போட்டியிடுகிறாா். தொகுதிக்கு உள்பட்ட பாப்பிநாயக்கன்பட்டி, கருங்கல்பாளையம் பகுதிகளில் மக்களிடையே வாக்குசேகரித்தாா். அப்போது, ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் நாமக்கல் தொகுதிக்கு கொண்டுவந்த திட்டங்கள், மகளிா் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம், மாணவ, மாணவிகளுக்கான திட்டங்கள் குறித்து பேசினாா்.

மேலும், தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள இல்லத்தரசி திட்டம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தாா். நிகழ்வின்போது, திமுக தொகுதி தோ்தல் பொறுப்பாளா் முனவா் ஜான் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.