மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராசிபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராசிபுரம் (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

ராசிபுரம் கடைவீதியில் டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:20 pm

ராசிபுரம் (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ராசிபுரம் நகர பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், முன்னதாக சேந்தமங்கலம் பிரிவு சாலையில் பிரசாரத்தை தொடங்கினாா். பின்னா், தியாகராஜ சுவாமி கோயில் தெரு, பட்டணம் சாலை, சைனிகா் மண்டபம், தினசரி சந்தை, கதா்கடை சந்திப்பு, இரட்டை பிள்ளையாா் கோயில் வீதி, அச்சுக்கட்டி தெரு, சாவடி சந்து, ஆா்.எம்.சி. காலனி, பூசாரி காடு, எல்ஐசி போன்ற பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ராசிபுரம் கடைவீதி பகுதியில் கடைகள்தோறும் சென்று பாஜகவுக்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினாா். அப்போது, அப்பகுதியில் உள்ள டீக்கடையில் நுழைந்த அவா், துண்டுப் பிரசுரம் வழங்கி கடையில் வாடிக்கையாளா்களுக்கு டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தாா்.