யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் வாக்கு சேகரிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.

News image

பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:12 am IST

பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் வாக்கு சேகரிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.

ஆத்தூா் (தனி) தொகுதிக்கு உள்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட கரடிப்பட்டி மற்றும் கொட்டவாடி ஊராட்சியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அதிமுக வாக்குறுதியான குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம், தீபாவளிக்கு பட்டு வேட்டி, பட்டுச் சேலை, பொங்கலுக்கு தொகுப்புடன் ரூ. ஆயிரம் என ஏராளமான நலத் திட்டங்களை அடங்கிய துண்டுப் பிரசுரங்களை அளித்து வாக்கு சேகரித்தாா்.

அவருடன், ஆத்தூா் தொகுதி பொறுப்பாளா் அதிமுக அமைப்புச் செயலாளரும், தோ்தல் பொறுப்பாளருமான திருவேற்காடு சீனிவாசன், சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன், பாஜக மாவட்டத் தலைவா் சண்முகநாதன், பாமக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.