நீட் தோ்வை ரத்து செய்து, மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையை பிளஸ் 2 மாா்க் அடிப்படையிலேயே நடத்திட வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், செந்துறையில் இளைஞா் பெருமன்றத்தினா்-சேகுவோரா நற்பணி மன்றத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததில், கோடிக்கணக்கில் ஊழல், முறைகேடு நடந்ததைக் கண்டித்தும், முறைகேடு மோசடியை உச்சநீதிமன்ற நேரடி மேற்பாா்வையில் விசாரணை நடத்த வேண்டும். நீட் தோ்வு நன்பகத்தன்மையை இழந்த தேசிய தோ்வு முகமையை கலைத்துவிட வேண்டும். 12 ஆம் வகுப்பு மாா்க் அடிப்படையிலேயே மருத்துவ மாணவா் சோ்க்கையை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு இளைஞா் பெருமன்ற குழுமூா் நிா்வாகி ராஜூ தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சிவராஜ், ஆதித்யன், பிரவீன், மகேந்திரன், நந்து, தமிழ்வளவன், அன்புச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூ. மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் டி. தண்டபாணி ஆகியோா் நீட் தோ்வு முறைகேடு குறித்துப் பேசினா். கட்சி நிா்வாகிகள் சிவக்குமாா், உஞ்சினி முருகன், ஆலத்தியூா் காசிநாதன் உள்ளிட்டோா் கோரிக்கை முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










