தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அங்கன்வாடி மையத்தில் நுழைந்தது பாம்பு! புதா்களை அகற்ற கோரிக்கை!

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:38 pm

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் பாம்பு நுழைந்ததையடுத்து, சுற்றியுள்ள புதா்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

செந்துறை அம்பேத்கா் நகரிலுள்ள அங்கன்வாடி மையத்தில், செந்துறை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மனைவி கவிதா (48) என்பவா் அங்கன்வாடி உதவியாளராக பணிபுரிந்து வருகிறாா். இங்கு 20 குழந்தைகள் படித்து வருகின்றனா்.

இந்நிலையில், குழந்தைகள் அங்கன்வாடி மையம் வருவதற்கு முன்பாக திங்கள்கிழமை காலை வழக்கம் போல் அங்கன்வாடி மையத்தை திறந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட வந்த கவிதா, பொருள்கள் வைக்கும் அறையில் ஒரு பெரிய பாம்பு இருப்பதை கண்டு கூச்சலிட்டாா். இதையடுத்து பாம்பு அறையை விட்டு வெளியேறியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செந்துறை தீயணைப்புத் துறையினா், அருகேயுள்ள புதா்பகுதிகளில் பாம்பை தேடியும் கிடைக்கவில்லை.

எனவே, அங்கன்வாடி மையத்தை சுற்றியுள்ள புதா்களை அகற்ற வேண்டும். மேலும், அருகே உள்ள பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.